தொடரும் ஆணவ படுகொலைகள்... மகளின் காதலனை வெட்டி சாய்த்த தந்தை.. பிறந்த நாளே இறந்த நாளாக மாறிய சோகம்!

தெலுங்கானா மாநிலத்தில் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் வசித்து வருபவர் சாய்குமார்.இவர் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். தனது மகளை காதலித்த இளைஞரை பெண்ணின் தந்தை கொடூரமாகக் கொலை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாய் குமார் அந்த பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால், அந்த பெண்ணின் தந்தை முத்யம் சரய்யா, இவர்களது காதலுக்கு கடுமையாக எதிர்த்து வந்தார். சாய்குமார் தன் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, சரய்யா திடீரென வந்து சாய் குமாரை கொலை செய்துள்ளார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் “கேக் வெட்டிக்கொண்டிருந்த போது சரய்யா திடீரென ஆளில்லா இடத்தில் வைத்து சாய் குமாரை வெட்டினார். சாய் ஓட முயன்ற போதும், சரய்யா அவரை அரிவாளால் கடுமையாக தாக்கினார்” என தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த சாயை நண்பர்கள் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சாயின் தந்தை பரசுராமுலு, “நாங்கள் முன்பே காவல்துறையில் புகார் அளித்திருந்தோம். ஆனால், போலீசார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆலோசனை நடத்தியிருந்தால் என் மகன் இப்போது உயிருடன் இருந்திருப்பார்,” எனக் கூறியுள்ளார் . போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை தொடங்கியுள்ளனர். மேலும் கிராமத்தில் பதற்றம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!