நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த கொடூரம்!! பதைபதைக்கும் வாக்குமூலம்!!

 
விஜய்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் வசித்து வருபவர் 36 வயது விஜய்.   இவரது மனைவி  சிந்தாமணி  .   இவர்கள் வசித்து வரும் அதே பகுதியில் வசிப்பவர் 34 வயது  மாரேஷ் .  இவரது சொந்த ஊர் பாகேபள்ளி தாலுகா மந்தம்பள்ளி கிராமம்.  விஜய்யும், மாரேசும்  நண்பர்கள்.  இவர்கள் இருவரும் சரக்கு ஆட்டோவில் துணிகளை எடுத்து கொண்டு கிராமம், கிராமமாக சென்று வியாபாரம் செய்து வந்தனர். இதனால் விஜய்யின் வீட்டுக்கு அடிக்கடி மாரேஷ் சென்று வந்துள்ளார். மாலாவுடனும்   சிரித்து பேசி வந்துள்ளார். இதனால்  விஜய், தனது மனைவியுடன் மாரேசுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் வந்துள்ளது.    

விஜய்

நாளுக்கு நாள் சந்தேகம் அதிகரித்து வந்த நிலையில்  மாரேசை கொலை செய்ய விஜய் திட்டமிட்டார்.  சரக்கு ஆட்டோவில் விஜய், மாரேஷ் மற்றும் தனது மற்றொரு நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு சித்தேப்பள்ளி கிராஸ் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சரக்கு ஆட்டோவை நிறுத்திய விஜய், மாரேசிடம் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்ததை கேட்டு தகராறில் ஈடுபட்டார். ஆனால் மாரேஸ் அதை மறுத்துள்ளார். இது குறித்து வாக்குவாதம் தகராறு கைகலப்பாக மாறியது.   ஆத்திரமடைந்த விஜய், மாரேசை கீழே தள்ளி தான் வைத்திருந்த கத்தியால், ஆட்டை அறுப்பது போல் மாரேசின் கழுத்தை அறுத்து விட்டார்.  மாரேசின் கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறியது. அதில் விஜய் தனது வாயை வைத்து உறிஞ்சி ரத்தம் குடித்தார்.

 இந்த சம்பவத்தை விஜயுடன் சென்ற அவரது மற்றொரு நண்பர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாரேஷின் அண்ணன்   சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரேசை மீட்டார். பின்னர் மாரேஷ் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், விஜய், மாரேசின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  ஜூன் 19ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது

ஆம்புலன்ஸ்

 இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விஜய் கைது செய்யப்பட்டுள்ளார்.  முதற்கட்ட விசாரணையில், தனது மனைவியுடன் மாரேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும், அதனால் ஏற்பட்ட சந்தேகத்தால் தான் நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்ததையும் விஜய் வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த துணி வியாபாரி நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web