தமிழ் மட்டுமில்ல... ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது... அமித்ஷா ஆவேசம்!

தமிழகத்தில் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா “ தமிழர்களின் பாரம்பரியம் பார்க்கையிலும், கலாச்சாரமும் இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் சிஐஎஸ்எப் தேர்வு தமிழ் மொழிகளில் கூட எழுத முடிகிறது.
எனவே, தமிழ் மட்டுமில்லை..ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு பல விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அடுத்ததாக மத்திய அரசு முக்கிய நடவடிக்கையாக மருத்துவம், பொறியியல் படிப்புகளும் மாநில மொழிகளில் படிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” எனவும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமித்ஷா பேசினார்.
முன்னதாக மும்மொழி கொள்கை விவகாரம் வைத்து முதல்வர் ஸ்டாலின் தமிழுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தரவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக அமித்ஷா இப்படி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!