பழங்குடி இளைஞரின் காலை கழுவி மன்னிப்பு கேட்ட முதல்வர்... வைரலாகும் வீடியோ!

 
முதல்வர்

மத்திய பிரதேச மாநிலம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது மதுபோதையில் இருந்த பாஜக பிரமுகர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இதற்காக மன்னிப்பு கேட்கும் வகையில் மத்திய பிரதேச முதல்வர் “ சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை போபாலில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து பேசிய முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அவரின் காலை கழுவினார். பின்னர் அவருக்கு மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இது குறித்து பழங்குடி இளைஞரிடம் சிவராஜ் சிங் சவுகான் ”  அந்த வீடியோவைப் பார்த்து நான் வேதனைப்பட்டேன். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் எனக்கு கடவுள் போன்றவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.  


 


மத்திய பிரதேச மாநிலம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது மதுபோதையில் இருந்த ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறுநீர் கழித்தார். இந்த கொடூர சம்பவம்  குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏவின் நெருங்கிய உறவினரும், பாஜக பிரமுகருமான பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்த நிலையில் பர்வேஷ் தலைமறைவானார்.இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

 

இந்நிலையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில்  குற்றவாளி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் நடத்தி பரவேஷ் சுக்லாவை கைது செய்த போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.இதற்கிடையில் இவ்விவகாரம் தொடர்பாகப் பேட்டியளித்த முதல்வர் சிவ்ராஜ் சவுகான், “கிரிமினல்களுக்கு சாதி, மதம், கட்சி என எதுவும் இல்லை. ஒரு கிரிமினல் எல்லா வகையிலும் கிரிமினல் மட்டுமே. இந்த நபர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web