முதல்வரின் சுற்றுப்பயணம்... நாளை இந்த பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை!

 
ட்ரோன்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலமாக காட்பாடி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதால், நாளை ஜூன் 25 மற்றும் ஜூன் 26 தேதிகளில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திட்ட பயன்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் செல்லும் இடங்களில் ரோடுஷோ நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

ஸ்டாலின்

நலத்திட்ட பயன்பாடுகளை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அந்த வகையில் ஜூன் 25 மற்றும் 26 தேதிகளில் வேலூரில் முதலமைச்சர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ட்ரோன்
இதனையடுத்து ஜூன் 25, 26 தேதிகளில்  டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பிறப்பித்துள்ளார்.

ஜூன் 25, 26ல் டிரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்க தடை விதித்துள்ளார். தடையை மீறி டிரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது