கொடூரம்... குழந்தையின் கழுத்தில் கத்தி.. தாயை சீரழித்த கொடூரர்கள்..!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வசித்து வரும் காதல் திருமணம் செய்த தம்பதியர் 6 மாத பச்சிளம் கைக்குழந்தையுடன் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர்.அந்த புகாரில் இருவரும் பெற்றோரை எதிர்த்து காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்தப்பகுதியில் தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த இளம் தம்பதிக்கு 6 மாத குழந்தை இருக்கும் நிலையில் இளைஞர் வேலைக்காக கேரளா சென்று விட்டார். அதே பகுதியில் வீட்டில் அந்த பெண் தனது பச்சிளம் குழந்தையுடன் வசித்து வந்தார்.
பிப்ரவரி 19ம் தேதி இரவு வேளையில் கதவை சாத்தி வைத்து வீட்டில் அமர்ந்திருந்த நிலையில் போதையில் இருந்த இரு இளைஞர்கள் திடீரென்று வீட்டிற்குள் புகுந்தனர். அந்தப்பெண் சத்தம் போட முயலவே ஒருவன் அந்தப்பெண்ணை வாயை பொத்தி மடக்கிப்பிடித்துள்ளான்.
மற்றொருவன் அந்த பச்சிளம் குழந்தையை தூக்கிப்பிடித்து கழுத்தில் கத்தியை வைத்தான். தங்கள் இச்சைக்கு இணங்கவில்லை எனில் அறுத்து போட்டுவிடுவோம் எனக் கூறி கடுமையாக மிரட்டினர். இதனால் சத்தம் போட இயலாமல் கண்ணீர் விட்டு கதறினார். இருந்தாலும் விடாமல் அந்த பெண்ணிடம் இரு அரக்கர்களும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை வெளியில் சொன்னால் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டுச் சென்றதாகவும், பின்னர் நள்ளிரவு 1;30 மணிக்கு அதே கொடூரர்கள் திரும்பி வந்து மீண்டும் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்திருந்தார். இச்சம்பவம் குறித்து வெளியூரில் இருந்த தனது கணவரிடம் செல்போன் மூலம் தெரிவித்ததாகவும், 3 நாட்கள் கழித்து தனது கணவர் ஊர் திரும்பியதால், அவருடன் வந்து புகார் அளித்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட இரு ஆசாமிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக சிறப்பு தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட காமுக அரக்கர்களின் அங்க அடையாளங்கள் மூலம் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய மாரிச்செல்வம் மற்றும் மாரியப்பன் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் அங்குள்ள மலைப்பகுதியில் பதுங்கி இருந்தனர். இருவரையும் போலீசார் சுற்றிவளைத்த நிலையில் தப்பி ஓடிய மாரியப்பனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவனை தூக்கிச்சென்று போலீசார் மாவுக்கட்டு போட்டுவிட்டனர். அந்த பெண்ணுக்கு இருமுறை ரணவேதனை கொடுத்த கொடூரன் மாரிச்செல்வம் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயற்சித்தார். இதில் மாரி செல்வத்தின் இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதால் நடக்க முடியாமல் தவழ்ந்தான். அவனை போலீசார் தூக்கிச்சென்று சிகிச்சைக்காக அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். வீட்டில் தனது குழந்தையுடன் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தாய்மார்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. தனியாக இருக்கும் பெண்கள் கதவை பூட்டிக் கொண்டு இருக்கவும், இரவு நேரத்தில் அறிமுகமில்லா நபர்கள் கதவை தட்டினால் திறக்க வேண்டாம் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!