சிறுமியை கடித்து குதறும் நாய்!! பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

 
சிறுமி நாய்

 சமீபகாலமாக தெருநாய்கள் சிறுவர், சிறுமி, குழந்தைகளை கடித்து குதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கேரளாவில் அடிக்கடி நடைபெற்ற இந்த  சம்பவம் தற்போது தெலங்கானா, கர்நாடகா, மும்பை என பல்வேறு பகுதிகளில் ல் தெருநாய்கள் குழந்தைகளை கடித்து குதறும்  சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதே போல் தற்போது பெங்களூருவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தசிறுமியை கடித்த மற்றொரு சம்பவம்  அரங்கேறியுள்ளது. 



கர்நாடக மாநிலம் பெங்களுரு கே.ஆர்.புரம் பகுதியில் ஒரு சிறுமி , பால் வாங்க சென்றுள்ளார். அப்போது திடீரென ஒரு வீட்டில் இருந்து ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் ஒன்று   அந்த சிறுமி மீது பாய்ந்து கடிக்க தொடங்கியது. பாய்ந்த வேகத்தில் அந்த சிறுமியை கீழே தள்ளி, கடித்து குதறியது. அக்கம் பக்கத்தினர் அந்த நாயை விரட்ட முயற்சித்தனர். ஆனால் நாய் எளிதில் சிறுமியை விட்டுவிடவில்லை . விடாமல் தொடர்ந்து கடித்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் அந்த நாயை பிடித்து இழுக்க முயன்றார்.

நாய்

அப்போதும் கூட அந்த நாய் சிறுமியை விடவில்லை. எப்படியோ ஒரு கட்டத்தில் அருகில் இருந்த பெண் நாயை பிடித்து இழுத்துள்ளார். இதன்பின், அந்த சிறுமி படுகாயத்துடன் கிடந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் சிறுமியின் தாய்க்கு தகவல் அளித்தனர். அவர்  ஓடிவந்து சிறுமியை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தார்.   அங்கு   சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்த  வீடியோ சமூகவலைதளங்களில்  வெளியாகி காண்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web