கானல் நீராகி போன கம்ப்யூட்டர் இன்ஜினியர் கனவு... சாலை விபத்தில் உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவன் 443 மதிப்பெண்!

 
 சுகுமார்

 தமிழ்நாட்டில் மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன.  இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்வு முடிவுகளை  மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in  இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் தான் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் என்ற மாணவன் கடந்த மாதம் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் 489 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசித்து வரும்  சுகுமார் என்ற சிறுவன் 12 ம் வகுப்பு படித்து வந்த நிலையில் ஏப்ரல்  21ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தற்போது ரிசல்ட் வந்த நிலையில் 433 மார்க் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சிறு வயது முதலே கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று மாணவன் கனவு கண்டு வந்த நிலையில் விபத்தில் மாணவனின் கனவு கலைந்தது பெற்றோர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web