ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டதால் வேன் கவிழ்ந்து விபத்து!! 16 பெண்கள் படுகாயம்!!

 
வேன் விபத்து

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் 5 வேன்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். இதன் பிறகு இவர்கள் கோவை ஈஷா யோகா மையம் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக வேன் ஒட்டன்சத்திரம் முதல் அவிநாசிபாளையம்  4 வழிச்சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. வேன் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

விபத்து

இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன்  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சாலைக்கடை அடுத்த மோதுப்பட்டி பகுதியில்  விவசாய நிலத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்தவர்களில்   3 குழந்தைகள் உட்பட  16 பேர் படுகாயம் அடைந்தனர்.  நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  

விபத்து

அத்துடன்  ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.  ஆம்புலன்ஸ் மூலம் 16 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு முதல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இச்சம்பவம் குறித்து கள்ளிமந்தயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web