வைரல் வீடியோ.. தூங்கிய ஓட்டுநரால் கோர விபத்து.. தப்பிக்க முடியாமல் உயிருடன் பெண் எரிந்து சாம்பல்..!!

 
 சித்தூர் விபத்து

பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநர் தூங்கியதால் பெருந்து பெரும் விபத்துக்குள்ளானது...

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு நேற்று இரவு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 34 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜோகுலாம்பா மாவட்டத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, ​​பேருந்து ஓட்டுநர் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து டிவைடரில் மோதி கவிழ்ந்தது.


அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் பேருந்தில் இருந்து பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி உயிர் தப்பினர். ஆனால் மெகாதிப்பட்டினத்தை சேர்ந்த மாலதி (40) என்ற பெண்ணின் கை மட்டும் பஸ்சில் சிக்கியதாக கூறப்படுகிறது. அதனால், உடனடியாக பேருந்தில் இருந்து இறங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தீப்பிடித்த பேருந்து

பஸ்சுக்குள் சிக்கிய பெண் வெளியே வராமல் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web