”தி எலிபன்ட் விஸ்பரர்” பொம்மன்,பொம்மிக்கு முதல்வர் பாராட்டு!!

 
ஆஸ்கர்

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து  ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers ஆவணப் படத்தில் இடம் பெற்ற பொம்மன்,  பெல்லி தம்பதியர்களை பாராட்டி தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த ஆவண குறும்படமாக ‘The Elephant Whisperers’  தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் தமிழகத்தில் முதுமலையில் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளை பராமரித்த பழங்குடியின தம்பதி பொம்மன் - பெல்லி  பற்றிய உண்மை கதையாகும்.  இந்த ஆவணப்படத்தை வன புகைப்பட கலைஞர் கார்த்திகி உருவாக்கியிருந்தார். 

ஆஸ்கர்
ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் இடம்பெற்றிருந்த பொம்மன் - பெல்லி பழங்குடியின தம்பதி சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ·The Elephant Whisperers' ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்கள் திரு. பொம்மன், திருமதி பெல்லி தம்பதியர்கள்.இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வாழ்த்துக்களும்,  பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன. அத்துடன் , பொன்னாடை போர்த்தி    பாராட்டுப் பத்திரமும், தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

யானை
தமிழகத்தில் உள்ள 2 யானை முகாகளில் மொத்தம் 91பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.  அத்துடன் யானை பராமரிப்பாளர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு  ஏற்ற வீடுகள் கட்டவும் தமிழக அரசு  உடனடியாக  ரூ 9.10 கோடி நிதி உதவியை ஒதுக்கியுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில் யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாமும் உருவாக்கப்படும்.  முதல்வரின் உதகை பயணத்தில்  முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் “அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்" ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது . இது குறித்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web