“தேர்வு முடிவு வாழ்வின் தொடக்கம் மட்டுமே... அதுவே முடிவல்ல.. முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு அறிவுரை!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்று நேரத்துக்கு முன் வெளியிட்டுள்ளார். இதில் 95.04% பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது.
இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான கட்டம் அமையவுள்ளது என்ற நேர்மறையான பார்வையுடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள். பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்!" என தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!