மனைவியுடன் தகராறு.., சொந்த மகனையே ஆள் வைத்து கடத்திய தந்தை!

 
ஆத்விக்

கணவன் மனைவி தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்த தம்பதிகளில்  தந்தையே மகனை கடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கடமலைகுன்று பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை காரில் அழைத்து செல்வது வழக்கம். அந்த வகையில் வழக்கம் போல் நேற்று  காலையும்  கார் டிரைவர் சுரேஷ் பள்ளி குழந்தைகளை ஒரு காரில்  அழைத்து சென்று கொண்டிருந்தார்.  

கடமலைக்குன்று அருகே சென்றபோது, 2 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் அந்த காரை வழிமறித்தது.  திடீரென அந்த கார்களில் இருந்த இறங்கிய கும்பல் காரில் இருந்த 3 வயது சிறுவன் ஆத்விக்கை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று விட்டனர்.  

நிழல் சிறுவன்

 அதிர்ச்சி அடைந்த கார் டிரைவர்  உடனடியாக  தாய்க்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. கடத்தப்பட்ட சிறுவன் ஆத்விக் பிலாங்காலை பகுதியில் வசித்து வரும் 27 வயது  ஜெயப்பிரியாவின் மகன்.

இது குறித்து ஜெயப்பிரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ” ஜெயப்பிரியாவுக்கும், அம்மாண்டிவிளையை சேர்ந்த கார் டிரைவர்  பிபின் பிரியனுக்கும்  7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகன் ஆத்விக் பிரியன். குடும்ப தகராறு காரணமாக ஜெயப்பிரியா கடந்த 3 மாதங்களாக  கணவரை  பிரிந்து குழந்தையுடன்  தந்தை சுந்தர் ராஜ் வீட்டில் வசித்து வருகிறார்.  மகன் ஆத்விக் பிரியனை கடமலைகுன்று தனியார் பள்ளியில் பிரீ.கே.ஜி. வகுப்பில் சேர்த்தார்.

போலீஸ்

சிறுவன் தினமும் பள்ளிக்கு காரில் சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை பள்ளிக்கு காரில் செல்லும் வழியில்தான் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியதாக அதிர்ச்சி தரும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயப்பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புகாரின் அடிப்படையில் பிபின் பிரியனின் செல்போன் சிக்னல் மூலம் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.  அதில் பிபின் பிரியன்  ஈத்தாமொழி பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு காவல்துறையினர்  சிறுவன் ஆத்விக் பிரியனை மீட்டனர்.

இதற்கிடையே பிபின் பிரியன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பிபின் பிரியன், அவரது தாயார் பூமதி, சகோதரி கமலா பிரித்தி, நண்பர் அஜித் உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு  கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web