கள்ளக்காதலி வீட்டில் இன்ஸ்பெக்டர்.. கையும் களவுமாக பிடித்து துவைத்து எடுத்த முதல் மனைவி !

 
சாம்ராஜியம்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படைப் பிரிவில் காவல் ஆய்வாளராக வாசு என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு சாம்ராஜியம் என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு திருமண வயதில் மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக வாசு - சாம்ராஜியம் தம்பதி பிரிந்துவிட்டனர். குறிப்பாக வாசு தனது மனைவியைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு காவல் ஆய்வாளர் வாசு, மௌனிகா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். எனினும் முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்யவில்லை என கூறப்படுகிறது.

சாம்ராஜியம்

இந்நிலையில், நெல்லூரை சேர்ந்த மற்றொரு ஒரு பெண்ணுடன் காவல் ஆய்வாளர் வாசு கள்ளக்காதலில் இருப்பது சாம்ராஜ்யத்திற்கு தெரியவந்தது. மறுமணம் செய்த கோபத்தில் இருந்தவருக்கு, கள்ளத்தொடர்பு சமாச்சாரமும் தெரிந்ததால் கொந்தளித்த அவர், தனது உறவினர்களுடன் சேர்ந்து அப்பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டு வீட்டுக்குள் புகுந்தார். அங்கு அந்த பெண்ணுடன் காவல் ஆய்வாளர் வாசு இருந்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும் பிடித்து வாக்குவாதம் செய்தார்.

சாம்ராஜியம்

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலினால் அங்கு சென்ற போலீசார் காவலர் வாசு மற்றும் அவரது மனைவியை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web