சாப்பாடு சரியில்ல... ZOMATO மற்றும் உணவகத்திற்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்க உத்தரவு!
இன்றைய அவசர யுகத்தில் பெரும்பாலான மக்கள் Zomato, Swiggy போன்ற உணவு விநியோகம் செய்யும் செயலிகளில் உணவு ஆர்டர் செய்கின்றனர். இந்நிலையில் Zomato செயலில் ஆர்டர் செய்த சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகபிரபுவுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் தரமற்ற உணவு விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறி சென்னை நுகர்வோர் குறைநீர் ஆணையம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் Zomato மற்றும் அர்ஜுன் மம்மி டாடி ஆந்திரா மெஸ் உணவகம் ரூ 2.5 லட்சம் அபராதம் வழங்க வேண்டும் என புகார் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை நுகர்வோர் குறைநீர் ஆணையம் தரமற்ற உணவு விநியோகம் செய்ததால் உடல் நலக்குறைபாடு ஏற்பட்ட வாடிக்கையாளருக்கு Zomato நிறுவனம் மற்றும் உணவகம் இணைந்து ரூ30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
