காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயம்... கல்லூரி மாணவர் தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆனதால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகர் 3ஆவது தெருவை சேர்ந்த தனலட்சுமி-அர்ச்சுனன் தம்பதியின் மகன் சரவணகுமார் (18). அர்ச்சுனன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தனலட்சுமி கூலி வேலை செய்து வந்தார். சரவணகுமார், கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாம். இதனால் மன விரக்தியில் இருந்து வந்த சரவணகுமார், சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். மேற்கு காவல் நிலைய போலீசார், சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!