நெகிழ்ச்சி! ஆடையின்றி சாலையில் சுற்றி திரிந்த பெண்ணுக்கு ஆடை தந்து உதவிய பெண் போலீஸ்!!

 
சரஸ்வதி

பெற்றெடுத்த பிள்ளைகள் கைவிடுவதால் முதியவர்கள் பலரும் பெரும் சோகத்துடன் சாலைகளில் திரிவதையும், சாலையோரங்களில் தங்குவதையும் பார்க்கிறோம். அப்படிஒரு சம்பவம் தான் கன்னியாகுமரியில் நடந்துள்ளது. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அரைகுறை ஆடையுடன் நாகர்கோயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில் சுற்றி திரிந்துள்ளார். 

சரஸ்வதி

பெண் ஒருவர் ஆடையின்றி சாலை ஓரமாக நடந்து செல்வதை பார்த்தும் அவரை மீட்க யாரும் முன்வரவில்லை. மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் சரஸ்வதி ஓடோடிச் சென்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் ஆடை ஒன்றை போர்த்தி அவரை மீட்டார்.

அதோடு மட்டுமல்லாமல் அப்பெண்ணை பராமரிக்கவும் முடிவுசெய்தார். இதற்காக அங்கிருந்து அழைத்துச் சென்று காப்பகத்தில் சேர்த்துள்ளார் என கூறப்படுகிறது. பெண் காவலரின் இந்த செயல் மக்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால் மக்கள் யாரும், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்கவரவில்லை ஏன் என் கேள்வி தொடர்கிறது. 

சரஸ்வதி

இதே கன்னியாகுமரியில்தான் சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரை, ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் நடு சாலையில் உள்ள கம்பத்தில் கட்டிவைத்தது குறிப்பிடத்தக்கது. அப்போது கூட அப்பெண்ணை மீட்க யாரும் முன்வரவில்லை. போலீசார் தான் சென்று மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web