பெற்றோர்களே உஷார்... தங்கையைக் கொன்ற சிறுமிகள்! வினையானது விளையாட்டு!

 
கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில்  2  சிறுமிகளும் சேர்ந்து தங்களது 2 மாத தங்கையை  குளிப்பாட்ட முயற்சித்தனர். அப்போது திடீரென  குழந்தை அவர்களிடமிருந்து நழுவி வாளிக்குள் தவறி விழுந்துவிட்டது. நீர் நிறைந்த வாளிக்குள் இருந்து குழந்தையை வெளியே எடுக்க முடியவில்லை.  பெற்றோரிடம் கூறினால் எங்கே திட்டுவார்களோ எனப் பயந்து  வாளியின் மீது ஒரு மூடியை போட்டு மூடி வைத்து விட்டனர். 

பெற்றோர் அன்புக்கு ஏங்கியதால் பச்சிளம் குழந்தைக்கு சூடு வைத்த 5 வயது சிறுமி!!
இதனை அறியாத பெற்றோர்கள் மார்ச் 22ம் தேதி 2 மாத கைக் குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  காணாமல் போன குழந்தையை வீட்டில் தேடிய போது, கண்டு பிடிக்க முடியாததால், குழந்தையை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில்  பெற்றோர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

பெற்றோரின் புகாரில் குழந்தைகளின் தாய் கைக்குழந்தை அக்காக்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறியிருந்தார். இதன் அடிப்படையில்  4 வயது, 6 வயது அக்காக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு வீடு முழுவதும் விடாமல் தேடியதில் 3 நாட்களுக்கு பிறகு குழந்தை சடலமாக  வாளியில் மிதந்து கொண்டிருந்தது.  தாய் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த போது சிறுமிகள் இருவரும் ஒரு டெடி பியர் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அம்மா அந்த பொம்மையை சுத்தம் செய்ய அதனை குளிப்பாட்டி, சுத்தம் செய்து வெயிலில் தொங்க விட்டதாகவும் தெரிவித்தனர். அந்த பொம்மையை குளிப்பாட்டியது போல் சகோதரியான குழந்தை அனார்ஜாவையும் ஒரு வாளியில் குளிப்பாட்ட வேண்டும் என நினைத்தாக  சிறுமிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

போலீஸ்

இதனால் படுக்கையில் இருந்த குழந்தை அனார்ஜாவை குளியலறைக்கு கொண்டு சென்று  வாளியின் விளிம்பில் வைத்துப் பிடித்தபடி குளிப்பாட்டத் தொடங்கினர். அப்போது, திடீரென  குழந்தை கையை விட்டு நழுவி வாளியில் விழுந்து விட்டது. இதனால்  2 மாதக் குழந்தை அனார்ஜாவின் மரணத்திற்கு சகோதரிகளின் தற்செயலான செயலே காரணம் என காவல்துறையினர் முடிவுக்கு வந்துள்ளனர். இந்திய சட்டப்பிரிவின்படி 7 வயதுக்குட்பட்ட குழந்தை செய்த குற்றத்தை பதிவு செய்ய முடியாது. எனவே சின்னஞ் சிறுமிகளின்  வயதை  காரணம் காட்டி அவர்களின் செயல் குற்றமாகக் கருதப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web