கால்வாயில் கவிழ்ந்த அரசு பேருந்து!! 3 பேர் படுகாயம்!!

 
பேருந்து

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து   இரவு 10 மணிக்கு  4சி என்ற அரசு பேருந்து   நாகர்கோவிலுக்கு  வந்து கொண்டிருந்தது. பேருந்தின்  ஓட்டுநர் டேவிட் ஆன்டனி. பேருந்தில் ஓட்டுனர் நடத்துனர் தவிர 2 பயணிகள் மட்டுமே  இருந்தனர். இறச்சகுளம் பெட்ரோல் பங்க் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தது. முன்னாள் சென்று கொண்டிருந்த  வாகனத்தை பேருந்து ஓட்டுநர் முந்துவதற்காக ஓவர் டேக் செய்ய முயன்றார்.  

விபத்து

அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த சுமார் 10 அடி ஆழம் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இரு பயணிகள் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  படுகாயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆம்புலன்ஸ்

பேருந்தில்  பயணிகள் கூட்டம் இல்லாததால் அதிஷ்டவசமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து கால்வாயில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web