திடீரென திருமணத்தை நிறுத்திய மணமகன்! பின் மனம் மாறியதும்.. சர்ர்ர்தான் போடா என நிராகரித்த மணமகள்!
ஊரெல்லாம் பத்திரிக்கை கொடுத்தாச்சு. சொந்த பந்தங்கள் எல்லாம் அட்சதைப் போட்டு ஆசீர்வாதம் செய்ய மண்டபத்தில் குவிந்துள்ளனர். இந்நிலையில், தெலங்கானாவில் நடைப்பெற இருந்த ஒரு திருமணத்தின் போது, சீர்வரிசைப் பொருட்களில் பழைய பயன்படுத்திய பீரோவை சீர்வரிசையாக கொடுத்ததால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார், திருமணத்தை நிறுத்தியுள்ளனர். மணமகனும், பீரோ பழசாக இருப்பதால் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது. புது பீரோ வாங்கித் தந்தால் தான் திருமணம் நடக்கும் என்று உறுதியாக சொல்லி விட்டார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநருக்கு நிகழ இருந்த திருமணத்தில் தான் இந்த கூத்து நிகழ்ந்திருக்கிறது. தான் திருமணம் முடிந்ததுமே புது பீரோ வாங்கித் தருவதாக கூறியும், இப்போதே போய் புது பீரோ வாங்கி வாங்க.. அப்புறமா தாலியைக் கட்டுறேன் என்று மணமகன் கறார் காட்டியிருக்கிறாது.
தான் புது பீரோ வாங்குவதற்கு இந்த நேரத்தில் கடை அருகில் இல்லை என்றும், திருமணத்தை நிறுத்த வேண்டாம் எனவும் கண்ணீருடன் மன்றாடியும், அநாகரீகமாக பேசி உள்ளனர். வேறு வழியின்றி மணமகள் வீட்டார், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே உறவினர் ஒருவர் எங்கிருந்தோ புதுசாக ஒரு பீரோவைப் பிடித்துக் கொண்டு வர, மாப்பிள்ளையும், மனம் மாறியவராய் மணமேடைக்கு தாலி கட்ட வந்தார். புரட்சி பெண்ணாக அது வரை அமைதியாக இருந்த மணமகள், தன் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி விட்டு, தனக்கு இப்படிப்பட்ட மணமகனைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க