ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை காப்பாற்றிய காவலர்.!!

 
மனைவி

சேலம் ரயில் நிலையத்துக்கு பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் அடுத்தடுத்து வரும் என்பதால் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில், இரவு 10.25 மணியளவில் கரூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது மனைவியுடன் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலில், சேலம் ஜங்ஷன் வந்தடைந்தார்.

மனைவி

ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர்கள், மற்றொரு ரயிலில் கரூர் செல்ல திட்டமிட்டிருந்தனர். அவர்கள் ரயில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது அதில் இருந்து இறங்க முயற்சித்தனர். அதாவது, ரயில் நிற்பதற்கு முன்பாகவே ஓடும் ரயிலில் ரவிக்குமாரின் மனைவி ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்றார். அப்போது தவறி நடைமேடையில் விழுந்தார்.

இதனைப் பார்த்த கணவர் ரவிக்குமார், ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயற்சித்தபோது தவறி நடைமேடைக்கும் ரயில் வண்டிக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழும் நிலையில் இருந்தார். அப்போது அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அஜித் துரிதமாக செயல்பட்டு, எந்த காயமும் இல்லாமல் ரவிக்குமாரை மீட்டார்.

மனைவி

இந்த சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகபரவி வரும் நிலையில், போலீசாரின் சமயோசிதமான நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web