நெகிழ்ச்சி!! தவறவிட்ட பணத்தை தேடிச் சென்று திருப்பிக்கொடுத்த ஆட்டோ டிரைவர்!!

 
ஆட்டோ டிரைவர் பூபாலன்

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியை சேர்ந்த பூபாலன், ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று காஞ்சிபுரத்திற்கு வடமாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் சிலரை தனது ஆட்டோவில், அத்திவரதர் கோவில் அழைத்துச் சென்று விட்டுள்ளார்.

அங்கு வடமாநிலத்தவர்களை இறக்கிவிட்டுவிட்டு தனது வீட்டுக்கு திம்பிவிட்டார். வீட்டுக்கு வந்த அவர் ஆட்டோவின் பின் இருக்கையில் பை ஒன்று இருப்பதை பார்த்துள்ளார். பின்னர் அந்த பையை  திறந்து பார்த்தபோது  ரூ. 50 ஆயிரம்  ரொக்க பணமும், அடையாள அட்டை, ஏடிஎம் கார்டு,பேருந்து அனுமதி சீட்டு உள்ளிட்டவை  இருந்துள்ளது.

ஆட்டோ டிரைவர் பூபாலன்

இதனையடுத்து  அடையாள அட்டையிலிருந்த புகைப்படத்தை பார்த்துபோது, அது தனது ஆட்டோவில் வந்த வடமாநில பயணி உடையது என்பது தெரியவந்தது. உடனடியாக தான் பயணிகளை ஏற்றிய பெரிய காஞ்சிபுரம் யாத்ரி நிவாஸ் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வடமாநிலத்தவர்கள் பதறியப்படி நின்றதை கவனித்தார். உடனே அவர்களிடம் பணப்பையை திருப்பி வழங்கி உள்ளார்.

ஆட்டோ டிரைவர் பூபாலன்

தவறவிட்ட பணப்பையை நேர்மையாக திருப்பி கொண்டு வந்து கொடுத்த ஆட்டோ டிரைவர் பூபாலனை மகிழ்ச்சியில் வடமாநிலக சுற்றுலா பயணி கட்டி பிடித்து வாழ்த்தினார். ஆட்டோ டிரைவரின் நேர்மையை வடமாநில சுற்றுலா பயணிகளும் பாராட்டி அவருக்கு பரிசு வழங்கினார்கள். இச்சம்பவம் குறித்து அறிந்த சக ஆட்டோ ஓட்டுநர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ஆட்டோ ஓட்டுநர்களும்  பூபாலனின் நேர்மையை பாராட்டி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web