தொடரும் பயங்கரம்... சாலையில் சென்ற மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!

ஸ்வீடன் நாட்டில் திடீரென மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உப்சலா நகரத்தில் வக்சலா சதுக்கத்தின் அருகில் ஏப்ரல் 29 ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார்.
இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தால் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஸ்வீடன் நாட்டில் குற்றவாளி கும்பல்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரையறைகளின்படி அந்நாட்டில் துப்பாக்கி உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் லைசன்ஸ் பெற வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஸ்வீடனின் ஒரிப்ரோ நகரத்தில் செய்லபட்டு வந்த கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!