டீ போட்டு தராததால் மனைவியின் தலையை துண்டித்த கணவர்... கொடூரம்..!

 
சுந்தரி

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்   ஃபசல்கர் கிராமத்தில் வசித்து வருபவர்   தரம்வீர். இவரது  மனைவி சுந்தரி . இவர்களுக்கு 3 மகன்கள். இதில்  தரம்வீருக்கு அடிக்கடி தேநீர் குடிக்கும் பழக்கம் இருந்தது.    இன்று காலை 6 மணிக்கு தரம் வீர் மனைவியிடம் குடிக்க  தேநீர் கேட்டுள்ளார். அடிக்கடி தேநீர் குடிப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல என சுந்தரி அறிவுரை கூறினார்.இதனால் தம்பதிகள் இருவருக்கும் காலையில்  தகராறு ஏற்பட்டது.

தேநீர்

  ஆத்திரத்தில்  தரம்வீர், வாளால் சுந்தரியைத் தாக்கியுள்ளார். அந்த சமயத்தில் இவர்களது மகன்   தடுத்துள்ளார். ஆனால், சுந்தரியின் தலையைத் துண்டித்துள்ளார். கொலை செய்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓடி விட்டார்  . அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அனைவரையும் மிரட்டி விட்டு தப்பி சென்று விட்டார்.  இச்சம்பவம் குறித்து அவர்களது  மகன் கொடுத்த புகாரின் பேரில்,   காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   

விளாத்திகுளத்தில் மனைவி கொலை
வழக்கு பதிவு செய்த ஏசிபி இது குறித்து  "காலையில் தேநீர் குடிப்பதில் ஏற்பட்ட தகராறு சண்டையாக உருவெடுத்தது. ஆத்திரத்தில்  தரம்வீர், வாளால் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிவிட்டார் .  விரைவில் அவரை கைது செய்வோம்" எனக் கூறியுள்ளார்.  தேநீர் கொண்டு வராததால்  மகன் கண்முன் மனைவியை தலையைத் துண்டித்து கணவர் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web