BTS மோகம்.. தென்கொரியாவுக்கு புறப்பட்ட அரசு பள்ளி மாணவிகள்.. வெளியான வீடியோவால் அதிர்ச்சி..!!
பி.டி.எஸ் மோகத்தால் தென்கொரியா செல்வதாக 3 மாணவிகள் புறப்பட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
கரூர் ராயனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 3 மாணவிகள் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற 3 மாணவிகளும் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அங்கு, பள்ளி முடிந்து வெளியேறியதாக சிறுமிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பள்ளி அருகே உள்ள கோவிலில் 3 மாணவிகள் சீருடைகளை கழற்றிவிட்டு மாற்று உடையில் பஸ்சில் ஏறியது தெரியவந்தது. மேலும், மாணவிகள் தொன் கொரிய இசைக்குழு பி.டி.எஸ் மீது அதீத மோகம் கொண்டு இருந்ததாகவும், கொரீயாவுக்கு செல்ல ஆர்வமாக இருந்ததாகவும் மற்ற மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்நிலையில், 3 மர்மமான பள்ளி மாணவிகள் முகமூடி அணிந்து பள்ளி பையுடன் கரூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!