மதுரையில் பரபரப்பு.. கவர்னர் கான்வாய் வழியில் முதியவர் தீக்குளிப்பு..!

 
முதியவர் தீக்குளிப்பு

ஆளுநர் கான்வாய் வரும் வழியில் முதியவர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் எல்.கணேசன் உள்ளார். மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11.20 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அழகர்கோயில் சாலையில் உள்ள அரசு விடுதியில் ஓய்வெடுக்க சென்றுள்ளார். பின்னர் விழாவுக்கு செல்லும் வழியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

RS Bharati's speech on the people of Nagaland - Governor La Ganesan  condemned | நாகாலாந்து மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேச்சு - கவர்னர் இல. கணேசன் கண்டனம்

இந்நிலையில், ஆளுநர் எல்.கணேசன் கான்வாய் செல்லும் பகுதியான கே.கே.நகர் வக்பு வாரியக் கல்லூரி முன்பு 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென தனது உடலில் தின்னரை ஊற்றி தீக்குளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்து ஓடி வந்த போலீசார், உடல் கருகிய நிலையில் இருந்த அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் எல்.கணேசனின் கான்வாய்க்கு முன் தீ குளித்த முதியவர் யார்? எதற்காக தீக்குளித்தார் என மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web