பழிக்கு பழி வாங்க ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை.. மர்ம கும்பலுக்கு வலை வீச்சு..!!
பழிக்கு பழி வாங்க நபர் ஒருவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
திருப்பூர் வெள்ளியங்காடு அருகே திரு.வி. க நகர் நாவிதன் தோட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). இவர் திரு. வி.க. நகரின் முதல் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், பாலமுருகனை வழிமறித்து தலையில் சரமாரியாக வெட்டி விட்டு, முகத்தை சிதைத்துவிட்டு தப்பிச் சென்றது.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் துறையினர், வெட்டி, சிதைக்கப்பட்ட பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் துணை போலீஸ் கமிஷனர், உதவி கமிஷனர் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
மோப்பநாய் சிறிது தூரம் சென்று மீண்டும் கொலை நடந்த இடத்திற்கு வந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்த பாலமுருகன் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், பழிவாங்கும் சம்பவமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கும்பலை போலீசார் 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!