”பெட்ரோலுக்கு காசு தர முடியாது”.. காவலர் முன்னே பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கிய மர்ம ஆசாமிகள்..!!
காவலர் முன்னே பெட்ரோல் நிலையத்தை மர்ம ஆசாமிகள் அடித்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருங்காக்கோட்டையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையம் உள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்திற்கு நேற்று மதியம் இருவர் வந்துள்ளனர். அந்த இருவர் பணம் கொடுக்காமல் பெட்ரோல் போடுமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளனர். அப்போது உரிமையாளர் அனுமதியின்றி பெட்ரோல் போட முடியாது என ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, ஊழியர்கள் உடனடியாக பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். பின்னர் பிரச்சனி செய்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், பெட்ரோல் பங்கில் பாதுகாப்புக்காக காவலர் ஒருவர் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு 3 பேர் கொண்ட கும்பல் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்து பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றது. அங்கு காவலர் ஒருவர் பாதுகாப்புக்கு இருந்த நிலையிலும், இந்த சம்பவம் அரங்கேறியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!