இணையத்தால் விபரீதம்... கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி... கதறும் கணவன்!

தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதி ஜெயராஜ், சுகன்யா. சுகன்யாவின் வயது 31. சுகன்யாவுக்கு சமூக வலைதளத்தின் மூலம் 22வயது கோபியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து பிப்ரவரி 5ம் தேதி அன்று சுகன்யா, கோபியுடன் ஓடிச்சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து தனது மனைவியை காணவில்லை என ஜெயராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவனுக்கு தெரியாமல் சுகன்யா, கோபியுடன் ரகசிய தொடர்பில் இருந்து வந்தார்.
மனைவியை எங்கு தேடியும் கிடைக்காததால் தவித்துப்போன ஜெயராஜ், கடந்த சில வாரங்களுக்கு பிறகு, மெட்சல் ஆக்ஸிஜன் பூங்கா அருகே தனது மனைவி, கோபியுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பார்த்தார். உடனே பின் தொடர்ந்த அவர், இருவரையும் மடக்கி பிடிக்க முயன்ற போது கோபியும், சுகன்யாவும் பைக்கை விட்டுவிட்டு ஓடும் பேருந்தில் ஏறிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!