உஷார்... பசுவை அடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப் புலி.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!

 
புலி

தமிழக-கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் ஆரியங்காவுப் பகுதி உள்ள சோலைக்கிளி எஸ்டேட்டை சேர்ந்தவர் தங்கையா. இவர் ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். மலைப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால், வனவிலங்குகள் உணவு, குடிநீருக்காக கீழே இறங்குகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

புலி

இந்நிலையில், தங்கையா வளர்த்து வந்த பசு மாடு ஒன்றை, புலி ஒன்று கடித்து இழுத்து சென்றுள்ளது. அதனை தொடர்ந்து, தங்கையா அளித்த புகாரின் அடிப்படையில் வனத்துறையினர், அந்த பகுதிகளில் கேமராக்களை வைத்து புலி நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். அப்பொழுது, அந்த பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். 

இதையயடுத்து, அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், தங்கையா வளர்த்து வரும் மற்றொரு மாட்டினை, தற்போது புலி ஒன்று கடித்து இழுத்து சென்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரள வனத்துறையினர், அந்த பகுதிக்கு வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புலி

மேலும் அங்கு வசித்து வரும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவர்கள் வளத்து வரும் வீட்டு விலங்குகளை பாதுகாப்பாக வளர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

    

From around the web