மளமளவென பாய்ந்த தீ… குடிசையோடு சேர்ந்து கருகிய மாற்றுத்திறனாளியின் உயிர்!
கடலூரின் விருத்தாசலம் அருகே எடச்சத்துர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அழகேசன், பெற்றோர் உயிரிழந்த பிறகு கடந்த பத்து ஆண்டுகளாக தனியாகவே தனது சிற்றீட்டில் வாழ்ந்து வந்தார். அருகிலுள்ள இருசாயி அம்மன் கோவிலில் குறி சொல்லி கிடைக்கும் வருமானத்தால் பிழைத்த இவர், எளிய விறகு அடுப்பில் தினசரி உணவு சமைத்து வந்துள்ளார்.
இன்று காலை வழக்கம்போல் அடுப்பில் சமையல் செய்தபோது, திடீரென கூரை வீட்டில் தீப்பற்றியது. நான்கு சக்கர வண்டி தூரத்தில் இருந்ததால் உடனே வெளியே வர முடியாமல் தவித்த அழகேசன், தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீ மளமளவென எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

மங்கலம்பேட்டை போலீசார் உடலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சமையலின் போது தவறுதலாக தீப்பற்றியதா, அல்லது யாராவது மர்மமாக தீ வைத்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வெளியேற இயலாமல் தீயில் கருகி உயிரிழந்த இந்த துயரச் சம்பவம் முழு கிராமத்தையும் ஆழ்ந்த இரங்கலில் ஆழ்த்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
