கதறித் துடித்த தாய்... சொத்தை கொடுத்தால் தான் இறுதிச்சடங்கு ... பத்திரப்பதிவுக்கு பிறகு தந்தைக்கு காரியம் செய்த மகன்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் தால்மாவ் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னா அஹிவார். 70 வயதான இவர் திடீரென உடல்நலக் கோளாறால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மகன் ராஜு, சொத்து விஷயத்தில் ஏற்பட்ட கோபத்தால், தந்தையின் இறுதிச்சடங்கிலும் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். இதனால், சின்னாவின் உடல் சுமார் 23 மணி நேரம் வீட்டின் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.
தந்தையின் கடைசி நாட்களில் மகனான ராஜு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. ஆனால் மகள் சுனீதா, அன்புடனும் பராமரிப்புடனும் தந்தையை கவனித்து வந்தார். இதனையடுத்து சின்னா தனது 2 ஏக்கர் நிலத்தை மகள் பெயரில் ரெஜிஸ்டர் செய்து கொடுத்து விட்டார். இந்த விஷயம் ராஜுவுக்கு கடும் மனவேதனையாக மாறி, தந்தை மீதான கோபமாகி விட்டது. இதனால், தந்தை இறந்தபோதும், “நிலம் பெற்றவங்க தான் இறுதிச்சடங்கு செய்யட்டும்!” என ராஜு கூறியுள்ளார்.
இச்சம்பவத்துக்கு பின்னர் போலீசார் தலையிட்டு மகளான சுனீதாவிடம் பேசி, ஒரு ஏக்கர் நிலத்தை ராஜுவுக்கு வழங்க தயாராக இருப்பதை கூறினார். ராஜு, வாய்மொழியில் ஒப்புக்கொள்ள மறுத்து, எழுதித் தந்தால் மட்டுமே இறுதிச்சடங்கு செய்வேன் என பிடிவாதமாக கூறி விட்டார். கடைசியாக, தாலுகா அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகப் பத்திரம் செய்யப்பட்ட பின், ராஜு தனது தந்தையின் சடலத்திற்கு கொள்ளி வைத்தார். சொத்துக்காக ஒரு மகன் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள மாட்டேன் என கூறியது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி பேசுபொருளாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!