தடைக்காலம் முடிந்தது... விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்!

தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், சூறாவளி எச்சரிக்கை காரணமாக நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 225 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 270 விசைப் படகுகளில் தினமும் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனிடையே மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.
அதன்படி, நிகழாண்டு தடைக்காலம் தொடங்கி, ஜூன் 14ம் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைந்தது. ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் 225 விசை படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!