சாலை ஓரத்தில் புதைக்கப்பட்டிருந்த குழந்தை சடலம்.. நாய்கள் கடித்து குதறியதால் பேரதிர்ச்சி..!!

 
குழந்தை

பழனியில் மர்மமான முறையில் சாலையோரத்தில் குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகருக்குள் வராமல் சண்முகநதியில் இருந்து சிவகிரிபட்டி செல்லும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப் பட்டுள்ளது. இங்கு சண்முகநதி அருகே உள்ள சாலையோரத்தில் குழந்தையின் உடல் ஒன்று இருப்பதாக பழனி நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.  அப்போது அங்கு பிறந்து ஒருசிலமணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் உடல் ஒன்றை நாய்கள் கடித்து இழுத்து கொண்டிருந்தன.

 இதையடுத்து குழந்தையின் உடலை  மீட்டனர். தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பழனி அருகே அ.கலையமுத்தூரை சேர்ந்த ராஜா, அவரது மனைவி ஜெயலலிதா ஆகியோருக்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பிறந்த குழந்தை இது என்பதும், வீட்டிலேயே பிரசவமான நிலையில் குழந்தை இறந்தே பிறந்ததால்‌ குழந்தையை சாலையோரத்தில் புதைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ராஜா மற்றும் அவரது மனைவி ஜெயலலிதா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web