வீட்டை விட்டு வெளியே சென்ற மீன் வியாபாரி.. மர்மமான முறையில் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!!
மீன் வியாபாரி மர்மமான முறையில் குளத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
கன்னியாகுமரி மாவட்டம் பாலியடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுமார் (41). இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மேலும் ராஜகுமார் அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் இரவு அவர் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் வீடு திரும்பாததால் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், இன்று காலை முருங்கைவிளை பகுதியில் உள்ள குளத்தில் ஆண் சடலம் மிதப்பதைக் குளிப்பதற்குச் சென்ற மக்கள் பார்த்து, பின்னர் இது குறித்து தக்கலை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குளத்தில் மிதந்த உடலை மீட்டனர். விசாரணையில், நேற்று மாலை காணாமல் போன ராஜகுமார் சடலமாக கிடந்தது தெரியவந்தது.பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜகுமாரின் உடலிலும் காயங்கள் உள்ளன.
மேலும், குளத்தின் கரையில் ரத்தக்கறை இருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் ராஜாகுமார் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளதாகவும், முன்விரோதம் காரணமாக யாரேனும் அடித்துக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீன் வியாபாரி உடலில் காயங்களுடன் குளத்தில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!