திமுகவுக்கு அடுத்த சிக்கல்... “நான் பேசினது தப்பு... “ நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்!

“நான் அப்படி பேசியிருக்க கூடாது... நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சர் துரைமுருகன் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி பேசிய சர்ச்சைப் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கட்சியின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் துரைமுருகனின் பேச்சு மட்டும் ஓகேவா? என்று எதிர்குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வருத்ததைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அறுவறுக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முத்தமிழறிஞர் கலைஞர் கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்" எனப் பெயரிட்டு அழைத்தார்.
அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம். அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என கழகத் தலைவர் தளபதி கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும்.
மாற்றுத்திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.தலைவர் தளபதி அவர்கள், எந்த அளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும்.அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!