இருமொழிக் கொள்கையையே தமிழக மக்கள் உயிர்மூச்சு... ஓபிஎஸ் பதிலடி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். “ பழனிசாமி தலைமையில் அதிமுக 11 முறை தோல்வியைக் கண்டது. அதிமுகவில் பிரிந்து கிடக்கின்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். ஆர்.பி.உதயகுமார் அதிமுகவில் என்ன நிலையில் இருந்தார் எனக் நான் கூறினால் அரசியல் நாகரீகமாக இருக்காது. என்னை பற்றியோ, என் குடும்பத்தை பற்றியோ பேசுவதை உதயகுமார் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
உதயகுமார் எப்படிப்பட்டவர் என்பது மதுரையில் இருப்பவர்களுக்கு தெரியும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்ததற்கு முழு காரணகர்த்தா அவர்தான். விசுவாசத்தை பொறுத்தவரை ஜெயலலிதா எனக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். அதிமுகவில் பிரச்சனையை யார் உருவாக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆறு மாதம் அமைதியாக இருந்தால் அதிமுகவில் இணைய பரிசீலிப்போம் என ராஜன் செல்லப்பா கூறுகிறார். அதிமுகவை ஒருங்கிணைக்க யாரிடமும் சிபாரிசு கேட்கவில்லை. என் மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்க சொன்னதே ஜெயலலிதா தான்.
இருமொழிக் கொள்கையையே அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றி வந்தனர். இருமொழிக் கொள்கையையே தமிழக மக்கள் உயிர் மூச்சாக கொண்டுள்ளனர். மும்மொழி கொள்கையை பின்பற்றினால் தான் நிதி ஒதுக்கீடு என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. அதிமுக ஒன்றிணைந்தால்தான் திமுகவை எதிர்த்து போராடும் சக்தி கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!