இன்றுடன் பிளஸ் 1 தோ்வு நிறைவடைந்தது... மே 19ல் முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு இன்று மாா்ச் 27ம் தேதியுடன் நிறைவடைந்தது. தோ்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்.19ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்வை சுமாா் 8 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா். அதன்படி தமிழ், இயற்பியல், கணிதம், வணிகவியல் உள்பட பெரும்பாலான பாடங்களுக்கான தோ்வுகள் முடிந்துவிட்டன.
இந்நிலையில் பிளஸ் 1 பொதுத்தோ்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. இதையடுத்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட தோ்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளில் சுமாா் 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 19ல் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்துதலின்போது ஆசிரியா்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தவறுகள் ஏதும் நடைபெறாதவாறு கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தோ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
