நள்ளிரவில் பரபரப்பு காட்டி பைக் ரேஸ் விட்ட இளைஞர்கள்... தட்டி தூக்கிய காவல்துறை !

 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னையில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல், ஜிபி ரோடு, மெரினா காமராஜர் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

பெண் போலீசார் காவலர்

அப்போது நள்ளிரவு நேரத்தில் போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி இளைஞர்கள் சிலர் சென்னையில் முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபட்டனர். அண்ணா சாலை, தேனாம்பேட்டை, தியாகராய நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கும்பல் கும்பலாக இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்வது மேலும் அதிக சத்தத்தை எழுப்பும் வகையில் வாகனத்தை இயக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர்.

இதனை தடுக்க முயன்ற தேனாம்பேட்டை பகுதியில் ஆய்வாளர்கள் மீது பைக்கானது மோதியுள்ளது. இதில் தேனாம்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போக்குவரத்துக் காவலர் ரோகித் இருவரும் சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

மேலும் பைக் ரேஸ் ஈடுபடும் நபர்களை சிசிடிவி காட்சிகளில் பைக் பதிவு எண்களை வைத்து காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என்ற காரணத்தால் இந்த கும்பல் நம்பர் பிளேட்டுகளில் துணி வைத்து மறைத்தும், நம்பர் பிளேட்டுகளை கழட்டி வைத்தும் சாமர்த்தியமாக பைக் ரேஸ்களில் ஈடுபட்டனர் 

சிறை

போலீசாரின் தீவிர நடவடிக்கையால் பைக் ரேஸில் ஈடுபட்ட சில இளைஞர்களை சுற்றி வளைக்கப்பட்டு காவல்துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டது. இதில் 35க்கும் மேற்பட்ட இளைஞர்களை சிறை பிடித்த போலீசார் 25 விலை உயர்ந்த பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகனப் பதிவு எண்களை அடிப்படையாகக் கொண்டு பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web