மகளை எரித்து ஆணவக் கொலை செய்த பெற்றோரை தட்டி தூக்கிய காவல்துறை... !

 
ஐஸ்வர்யா

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை   நெய்விடுதி கிராமத்தில் வசித்து வருபவர்  பெருமாள். இவரின் மகள்  19 வயது ஐஸ்வர்யா.   பக்கத்து கிராமமான பூவாளூரில் வசித்து வருபவர்  பாஸ்கர். இவரின் மகன் நவீன் . இருவரும் வெவ்வேறு  சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.  ஐஸ்வர்யாவும், பட்டியலினத்தைச் சேர்ந்த நவீனும் பள்ளி காலத்திலிருந்தே நண்பர்கள். நட்பு காதலாகி  காதலித்து கொண்டே படித்தனர்.  படிப்பை முடித்த பிறகு இருவரும், ஒரே கம்பெனியில் திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளனர்.

ஐஸ்வர்யா
இருவரும்  15 நாட்களுக்கு முன்  நண்பர்கள் முன்னிலையில்   திருமணம் செய்துகொண்டனர். இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.  இது குறித்த வீடியோ ஒன்றும் வாட்ஸ்அப் குரூப்பில் பரவியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில்  விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   ஐஸ்வர்யாவின் உறவினர்கள் போலீசிடம் பேசி  ஐஸ்வர்யாவை மட்டும் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.அங்கு ஐஸ்வர்யாவை  உறவினர்கள் அடித்து துன்புறுத்திய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா

இந்நிலையில்  மர்மமான முறையில் உயிரிழந்த ஐஸ்வர்யாவின் உடலை, உறவினர்கள் போலீசிடம் தெரிவிக்காமல் எரித்து விட்டனர்.  பட்டியலின சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால் ஐஸ்வர்யாவை ஆணவக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தால் கிராமம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  
பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதற்காக அவரது உறவினர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஐஸ்வர்யாவை ஆணவக் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இச்சம்பவம் குறித்து  வழக்கு ப்பதிவு செய்யப்பட்டு தீவிர  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

 ஜனவரி 3ம் தேதி நவீனுடன் பேசிய அவரது   நண்பர்கள், “உன் மனைவி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்துக் கொலை செய்து எரித்துவிட்டனர்” எனக் கூறினர். அதிர்ச்சி அடைந்த நவீன் கதறித்துடித்தார். உடனே  வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார்  அளித்தார்.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்றது. அதில்  ஐஸ்வர்யா மர்மமான முறையில் தூக்குப் போட்டு இறந்ததாகவும்,  அவரது உடலை அவசர அவசரமாக சுடுகாட்டில் வைத்து எரித்ததாகவும் கூறினர். இது குறித்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் ,   மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது தங்கை விளம்பரசி, மற்றொரு தங்கை இந்து ஆகியோரிடம்  நடத்தப்பட்ட விசாரணையில்  ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது.  காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து பெருமாளையும் அவரது மனைவி ரோஜா உள்பட அவரது உறவினர்கள் 15 பேரையும்  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web