பொருநை அருங்காட்சியகம் இன்று முதல் பொதுமக்கள் சுற்றிப் பார்க்க அனுமதி!
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘பொருநை அருங்காட்சியகம்’ இன்று (டிச.23) முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். பொருநை நாகரிகத்தின் வரலாறும், பெருமையும் நவீன தொழில்நுட்பத்தில் இங்கு விளக்கப்படுகிறது.
உள்நாட்டு பார்வையாளர்களுக்கு பெரியவர்களுக்கு ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.10, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5 என நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.25 வசூலிக்கப்படும். புகைப்பட கேமராவுக்கு ரூ.30, வீடியோ கேமராவுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், 5D தியேட்டர் ‘ஐந்திணை’க்கு ரூ.25, 7D படகு சிமுலேட்டருக்கும் ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், குடியரசுத் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற தேசிய விடுமுறைகளிலும் அருங்காட்சியகம் இயங்காது. பொருநை நாகரிகத்தை அறிய பொதுமக்கள் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும் என தொல்லியல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
