கிடுகிடுவென உயர்ந்தது பூக்கள் விலை!

இன்று பங்குனி உத்திரத் திருநாள் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். இதன் காரணமாக தற்போது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ400க்கு விற்பனையான மல்லி தற்போது ரூ600 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போன்று ஐஸ் மல்லி ரூ400 க்கும், முல்லை ஒரு கிலோ ரூ 750 க்கும், பன்னீர் ரோஜா ரூ120 க்கும், ஜாதிமல்லி ரூ750 க்கும், சாமந்திப்பூ ரூ180 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்பிறகு அரளி பூக்களோ ரூ 350 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி தோவாளை சந்தையிலும் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!