தப்பிச் சென்ற சிறை கைதி... செல்லும் போது பைக்கைத் திருடிச் சென்ற அவலம்!

 
அப்துல் காதர்

புதுச்சேரி மாநிலம் ரோடியோர் பேட் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் (20), என்பவர் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்துள்ளார். சாவியே இல்லாமல் பைக்குகளில் திருடுவதில் இவர் கில்லாடி. மேலும் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் திருடும் இருசக்கர வாகனங்களை அடிமாட்டு விலைக்கு ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

இது தொடர்பான புகார்களில் அவரை தேடிவந்த போலீசார், சமீபத்தில் புதுச்சேரி - கோட்டகுப்பம் எல்லையில் பதுங்கி இருந்த அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அந்த இருசக்கர வாகனங்களுக்கு எந்த ஒரு ஆவணமும் இல்லாததால் அந்த வாகனங்களை அவர் குறைந்த விலைக்கு விற்று மது குடித்து வந்துள்ளார்.

அப்துல் காதர்

பின்னர் பெரிய கடை போலீசார் அவரை கைது செய்து, மூன்று வாகனத்தை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அந்த நபர் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குறைந்த ரத்த அழுத்தம் எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், போலீசாரை ஏமாற்றிவிட்டு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

அப்துல் காதர்

அவ்வாறு அவர் தப்பி செல்லும்போது முதலியார் பேட்டையில் இருசக்கர வாகனம் ஒன்றே திருடிக் கொண்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது தப்பி ஓடிய அப்துல் காதரை பெரியகடை காவல் துறையினர் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தப்பி செல்லும்போது முதலியார் பேட்டை பகுதியில் அப்துல் காதர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web