சுங்கச்சாவடி வேணாம்... இன்று திறப்பு விழா இருந்த நிலையில் அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அந்த பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி இன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சாலை பணிகள் முழுவதுமாக நிறைவடையாமல் சுங்க சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் தீர்வு எட்டப்படாததால் ஆத்திரம் அடைந்த மக்கள், சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.
இன்று காலை சுங்கச்சாவடி திறக்கப்பட இருந்த நிலையில் பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்திருக்கும் நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!