'சீல் டவர்' பிரமாண்டம்... உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறப்பு!
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், உலகின் மிக உயரமான ஹோட்டல் என்ற பெருமையுடன் 'சீல் டவர்' (Ciel Tower) என்ற பெயரில் வானுயர்ந்த ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டல், 1,237 அடி (சுமார் 356 மீட்டர்) உயரத்தில் துபாயின் கடற்கரையோரம் கட்டப்பட்டுள்ளது. 'தி பர்ஸ்ட் குரூப்' என்ற கட்டுமான நிறுவனம் கட்டித் தந்துள்ள இந்த ஹோட்டல், கண்ணாடி மாளிகையாக ஜொலிக்கிறது. இதில் மொத்தம் 82 தளங்களும், 1,004 அறைகளும் அமைந்துள்ளன. இந்த ஹோட்டலை 'இம்மோ பிரஸ்டீஜ் லிமிடெட்' என்ற நிறுவனம் திறந்துள்ளது.

'தி பர்ஸ்ட் குரூப்'பின் தலைமைச் செயல் அதிகாரி ராப் பர்ன்ஸ் இது குறித்துப் பேசுகையில், "இந்த ஹோட்டலை இவ்வளவு உயரத்தில் கட்ட முதலில் தீர்மானிக்கப்படவில்லை. வரைபடங்கள் திருத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்டபோது இதன் உயரம் எதிர்பாராதவிதமாக அதிகரிக்கப்பட்டது. உலகின் மிக உயரமான ஹோட்டலைக் கட்ட வேண்டும் என நாங்கள் நிச்சயமாகத் திட்டமிடவில்லை; இது எதிர்பாராதவிதமாக நடந்தது" என்று தெரிவித்தார்.

ஹோட்டலின் உச்சியில் உள்ள 'ஸ்கை லவுஞ்ச்' எனப்படும் ஓய்விடம் மற்றும் பிற உயரமான தளங்களில் இருந்து துபாய் கடற்கரை, பாம் ஜுமேரா மற்றும் வளைகுடாவின் 360 டிகிரி முழுமையான காட்சியைப் பார்க்க முடியும். 76வது தளத்தில் காற்றைச் செலுத்தும் வெற்றிடத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம், அதன் தண்ணீர் வானத்தில் மறைவது போல இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியச் செங்குத்தான பூங்காக்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன், மேல் தளத்தில் பிரிட்டனைத் தளமாகக் கொண்ட 'டட்டு பிராண்டு' உட்பட மொத்தம் எட்டு உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
