எமனாய் வந்த ஷேர் மார்க்கெட்... மனைவி, பிள்ளைகளை தவிக்க விட்டு இளைஞர் தற்கொலை!

 
மணிமேகலா

மதுரை அவனியாபுரத்தில் உள்ள பிரசன்னா காலனி பகுதியில் ஜெகதீஷ் - மணிமேகலா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்போது கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து வந்துள்ளார். இதில் அவர் பணத்தை இழந்ததாக தெரிகிறது. மேலும் இழந்த பணத்தை பெற தொடர்ந்து கடன்பெற்று முதலீடு செய்துள்ளார். பின்னர், அவர் பழனியில் உள்ள அவரது வீடு மற்றும் சொத்துக்களை விற்று பாதி  கடனை அடைத்துள்ளார்.

மணிமேகலா

அங்கு கடன் தொல்லை தாங்க முடியாமல் மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனியில் உள்ள அவரது தந்தை ஜெகநாதன் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். எனவே முழுமையாக கடனை அடைக்க முடியாததால் கடனை கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொடர்ந்து தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஜெகதீஷ் நேற்று தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
மணிமேகலா

இதனைக் கண்ட உறவினர்கள்  ஜெகதீஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web