”உலகிலேயே பெஸ்ட் என் அப்பா... இனி வரவே மாட்டாரா?” கதறிய அழுத மகன்!

 
ஜம்மு
 உலகின் சிறந்த தந்தை என் அப்பா... இனி திரும்ப வரவே மாட்டாரா என்று காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மதுசூதனின் மகன் கதறியழுத சம்பவம் அங்கிருந்தவர்களை உலுக்கியது. தீவிரவாதிகளால் கொல்லபட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரின் உடல் விமானம் மூலம்  சென்னை கொண்டு வரபட்டது. உலகிலேயே சிறந்த தனது தந்தை இனி வரமாட்டாரா என கதறிய அவரது மகனின் கதறல் அனைவரையும் உலுக்கியது.

ஜம்மு

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லபட்ட 27 பேரில் ஒருவரான ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த மதுசூதனின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரபட்டது. அப்போது உடலை வாங்க வந்திருந்த அவரது குடும்பத்தினர் சோகத்தில் கதறி அழுதனர். 

ஜம்மு

பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அரசு அதிகாரிகள் , மற்றும்  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட  அதிமுக காங்கிரஸ் நிர்வாகிகள் மதுசூதனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது பலியான  மதுசூதனின் மகன்,  அஞ்சலி செலுத்த வந்த ஒவ்வொருவரின் கையையும் பிடித்து கொண்டு தனது தந்தை இனி வரமாட்டாரா என கேட்டதோடு தனது தந்தை உலகிலேயே சிறந்தவர் என கூறி, ‘நைனா... நைனா’ என கதறிய காட்சி அங்கிருந்தவரகளின் மனதை உலுக்கியதோடு அனைவரையும் கண்கலங்க வைத்தது.  பின்னர் அவரது குடும்பத்தார் மற்றும் ஆந்திர மாநில வட்டாட்சியரிடம் பிரேதத்தை ஒப்படைத்த அதிகாரிகள், அவசர ஊர்தி மூலம் சொந்த ஊரான நெல்லூர் அனுப்பி வைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web