மணமகள் அறையில் அலறல்!! சடலமாக கிடந்த மணமகன்.. பகீர் பின்னணி !!

 
கஹ்காஷா பானோ

சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள திக்ரபாரா பகுதியில் அஸ்லாம்(24),  மனைவி கஹ்காஷா பானோ(22) ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக மணமக்கள் இருவரும் நிகழ்ச்சிக்கு தயாராகி கொண்டிருந்தனர். அப்போது, மணமக்கள் இருந்த அறைக்குள் இருந்து மணமகளின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது.  

இதைக் கேட்ட திருமண வீட்டார் அனைவரும் பெரும்  அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பதறி அடித்துக் கொண்டு அந்த அறை பக்கம் சென்றிருக்கிறார்கள். அறைக்கதவை பலமுறை தட்டியும் திறக்காததால், சுவரில் ஏறி ஜன்னல் வழியாக பார்த்திருக்கிறார்கள். மணமக்கள் இருவரும் அந்த அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார்கள்.

கஹ்காஷா பானோ

இது குறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கதவை உடைத்துஉள்ளே சென்றபோது இருவரும் கத்தி காயங்களுடன் சடலமாக கிடந்திருக்கிறார்கள். பின்னர் பூட்டிய அறைக்குள் வேறு யாரும் இவர்களை கொலை செய்திருக்க முடியாது, கொலை செய்தாலும் உள்ளே தாழ்ப்பாள் போட்டுவிட்டு எப்படி தப்பியோட முடியும் என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

பின்னர் தீவிர விசாரணைக்கு பிறகு, மணமக்கள் இருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மணமகன் அஸ்லாம்,  மணமகள் கஹ்காஷா பானோவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பின்னர் தானும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

கஹ்காஷா பானோ

பின்னர் போலீசார்  இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். வரவேற்புக்கு தயாராகிக் கொண்டிருந்த உறவினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போய் கொண்டு இருக்கிறார்கள். எனினும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web