கொளுத்துது வெய்யிலு... தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

 
வெயில் மழை

இன்னும் அக்னி நட்சத்திரமும், கத்திரி வெய்யிலும் ஆரம்பிக்காத நிலையில், இப்போதே தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து மக்களை வதக்கி எடுத்து வருகிறது. இந்நிலையில், சந்தோஷ செய்தியாக இன்று முதல் அடுத்த 4 தினங்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வெயில் மாஸ்க் மாணவிகள் இளம்பெண்கள்

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால், இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை மற்றும் நாளை மறு தினம் ஏப்ரல் 23, 24ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.  இதே போல் ஏப்ரல் 25ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.  

கன மழை

சென்னையைப்  பொறுத்த வரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 38-39 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் என்றும் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web