திருடிய வீட்டில் போதையில் தூங்கிய திருடன்! விசாரணையில் போலீசாரை அதிர வைத்த காரணம்!

 
சுதந்திரநாதன்

திருப்பத்தூர் திருடிய வீட்டில், அசதியாலும் மது போதையாலும், கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த திருடனை, காலையில் வீட்டு உரிமையாளர் வந்ததும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நடுவிக் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், தற்போது காரைக்குடியில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். விடுமுறை மற்றும் திருவிழாக்கள் போன்ற நாட்களில், திருப்பத்தூரில் உள்ள வீட்டுக்கு குடும்பத்தினருடன் வந்து தங்கியிருந்து செல்வது பாண்டியனின் வழக்கம். அதனால், அந்த வீட்டில் ஃபர்னிச்சர் பொருட்களை மட்டும் வைத்திருந்திருக்கிறார். 

இந்நிலையில், அக்கம் பக்கத்தினர் பாண்டியன் வீட்டின் ஓடுகள் பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர், இது குறித்து பாண்டியனுக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பாண்டியன், நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசாரும் விரைந்து பாண்டியன் கொடுத்த விலாசத்துக்கு சென்றனர். வீட்டிற்குள் போலீசார் சென்று பார்த்த போது அவர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. 

nachiyarpuram

வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே சென்ற திருடன், மது போதையில் ஹாயாக கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். திருடனைத் தட்டி எழுப்பி விசாரித்த போது, சைகையிலேயே ‘நீங்க எல்லாம் யாரு, விடிஞ்சுருச்சா?’ என்று கேட்டு போலீசாருக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறான். உடனே, வீட்டு உரிமையாளரின் உறவினர்கள் அந்தத் திருடனுக்கு தர்ம அடி கொடுத்திருக்கின்றனர்.

போலீசாரின் தயவால் அவர்களிடமிருந்து தப்பித்த திருடனை, போலீசார் திருடனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். விசாரணையில், அந்தத் திருடன் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர நாதன் என்பது தெரிய வந்தது.

nachiyarpuram PS

ஏற்கெனவே தான் திருட்டு வழக்கில் ஒன்றில் சிறைக்குச் சென்று விட்டு, திருப்பத்தூரிலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்த போது, ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு வீட்டுக்குள்  சுதந்திர நாதன், சுதந்திரமாக இறங்கியிருக்கிறார்.

பூட்டிக் கிடந்த வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய சுதந்திர நாதன், அங்கிருந்த குத்து விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட பண்ட பாத்திரங்களை பத்திரமாக மூட்டை கட்டி வைத்து விட்டு, நள்ளிரவில் கிளம்பலாம் என்று நினைத்து மது அருந்தியிருக்கிறார்.  மது அருந்தி விட்டு, பொருட்களை மூட்டை கட்டி விட்டு ஏன் கிளம்பவில்லை என்று கேட்ட போது, ‘கட்டில் மெத்தையில் படுத்திருந்து விட்டு, நள்ளிரவுக்கு மேல் போகலாம்னு நெனைச்சேன். ஹெட்போனில் கொஞ்ச நேரம் இளையராஜா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.அப்படியே அயர்ந்து தூங்கிட்டேன்’ என்று கூலாக போலீசாரின் விசாரணையில் கூறி அதிர வைத்திருக்கிறான்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web